Tamil Bible Quiz Deuteronomy Chapter 21

Q ➤ 626. கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிறவனைக் கொன்றவன் இன்னானென்று தெரியாதிருந்தால் அவனிடத்திற்குப் போகவேண்டியவர்கள் யார்?


Q ➤ 627. மூப்பரும் நியாயாதிபதிகளும் யாரைச் சுற்றி இருக்கும் பட்டணங்கள் மட்டும் அளப்பார்கள்?


Q ➤ 628. கொலைசெய்யப்பட்டவனுக்கு சமீபமான பட்டணத்து மூப்பர் எதைப் பிடிக்கவேண்டும்?


Q ➤ 629. பட்டணத்து மூப்பர் பிடிக்கும் கிடாரி எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும்?


Q ➤ 630. கிடாரியை எங்கேக் கொண்டுபோக வேண்டும்?


Q ➤ 631. தரிசான பள்ளத்தாக்கில் கொண்டுபோன கிடாரியின்........வெட்டிப்போட வேண்டும்?


Q ➤ 632. கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கும்படி தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் யார்?


Q ➤ 633. கர்த்தருக்கு ஆராதனைச் செய்யும்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்?


Q ➤ 634. லேவியின் குமாரராகிய ஆசாரியரின் வாக்கின்படி தீர்க்கப்பட வேண்டியவை எவை?


Q ➤ 635. கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர் எதின்மேல் தங்கள் கைகளைக் கழுவவேண்டும்?


Q ➤ 636. கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர், தங்கள் கைகள் எதைச் சிந்தினதில்லை என்று கூறவேண்டும்?


Q ➤ 637. எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லையென்று கூறவேண்டியவர்கள் யார்?


Q ➤ 638. இஸ்ரவேலின்மேல் எதைச் சுமத்தாதிரும் என்று பட்டணத்தின் மூப்பர் சொல்லவேண்டும்?


Q ➤ 639.தமது பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்போது, கர்த்தர் எதை இஸ்ரவேலை விட்டு விலக்குவார்?


Q ➤ 640. யாரை விவாகம்பண்ண விரும்புகிறவன் அவள் தலையை சிரைக்கவேண்டும்?


Q ➤ 641. சிறைபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை ஒருவன் விவாகம்பண்ண விரும்பினால் அவள் எதைக் களைந்து விடவேண்டும்?


Q ➤ 642. சிறைபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை ஒருவன் விவாகம்பண்ண விரும்பினால் அவள் எதை நீக்கிவிடவேண்டும்?


Q ➤ 643. சிறைபிடிக்கப்பட்ட ஸ்திரீ யாரை நினைத்து துக்கங்கொண்டாட வேண்டும்?


Q ➤ 644. சிறைபிடிக்கப்பட்ட ஸ்திரீ தன் தகப்பனையும் தாயையும் நினைத்து எத்தனை நாள் துக்கங்கொண்டாட வேண்டும்?


Q ➤ 645. சிறைபிடிப்பிலிருந்து விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயின்மேல் புருஷனுக்கு பிரியம் இல்லாவிட்டால் அவளை என்ன செய்யக்கூடாது?


Q ➤ 646. புருஷனுக்கு பிரியமில்லாத சிறைபிடிக்கப்பட்ட மனைவியை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 647. சேஷ்டபுத்திர சுதந்தரம் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும்?


Q ➤ 648. தகப்பன் தன் முதற்பேறானவனுக்கு ஆஸ்திகளில் எத்தனை பங்கு கொடுக்கவேண்டும்?


Q ➤ 649. முதற்பிறந்தவனுக்குரியது எது?


Q ➤ 650. பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவனும் அடங்காதவனுமான துஷ்டப் பிள்ளையை யாரிடத்தில் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 651. பட்டணத்தின் மூப்பரிடம் கொண்டுவரப்பட்ட துஷ்டனை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 652. மரத்திலே தூக்கிப்போடப்பட்டவனின் பிரேதம் எப்பொழுது மரத்தில் தொங்கக்கூடாது?


Q ➤ 653. தேவனால் சபிக்கப்பட்டவன் யார்?