Tamil Bible Quiz Numbers Chapter 13

Q ➤ 355. எந்த தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு மனிதரை அனுப்ப கர்த்தர் கூறினார்?


Q ➤ 356. ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் யார் கானான் தேசத்துக்கு அனுப்பப்பட வேண்டும்?


Q ➤ 357. மோசே கர்த்தருடைய வாக்கின்படி எங்கேயிருந்து மனுஷரை கானானுக்கு அனுப்பினார்?


Q ➤ 358. கானானுக்கு அனுப்பப்பட்ட மனிதர்கள் யார்?


Q ➤ 359. ரூபன் கோத்திரத்தில் கானானுக்கு அனுப்பப்பட்ட மனிதன் யார்?


Q ➤ 360. சிமியோன் கோத்திரத்திலிருந்து மோசே யாரை கானானுக்கு அனுப்பினார்?


Q ➤ 361. யூதா கோத்திரத்திலிருந்து கானானைச் சுற்றிப் பார்க்கப் போனது யார்?


Q ➤ 362. இசக்கார் கோத்திரத்திலிருந்து கானானுக்கு அனுப்பப்பட்டது யார்?


Q ➤ 363. எப்பிராயீம் ப்பிராயீம் கோத்திரத்திலிருந்து மோசே யாரை கானானுக்கு அனுப்பினார்?


Q ➤ 364. பென்யமீன் கோத்திரத்திலிருந்து கானானைச் சுற்றிப் பார்க்கப் போனது யார்?


Q ➤ 365. செபுலோன் கோத்திரத்தில் கானானுக்கு அனுப்பப்பட்டது யார்?


Q ➤ 366. யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்திலிருந்து கானானுக்கு அனுப்பப்பட்டது யார்?


Q ➤ 367. தாண் கோத்திரத்திலிருந்து கானானைச் சுற்றிப் பார்க்கப் போனது யார்?


Q ➤ 368. மோசே, ஆசேர் கோத்திரத்தில் யாரை கானானுக்கு அனுப்பினார்?


Q ➤ 369. நப்தலி கோத்திரத்திலிருந்து கானானுக்கு அனுப்பப்பட்டது யார்?


Q ➤ 370. காத் கோத்திரத்திலிருந்து கானானைச் சுற்றிப் பார்க்கப் போனது யார்?


Q ➤ 371.மோசே யாருக்கு யோசுவா என்று பெயரிட்டார்?


Q ➤ 372.யோசுவாவின் அப்பா பெயரென்ன?


Q ➤ 373. கானானுக்கு வேவு பார்க்கச் சென்ற காலம் எந்த காலமாயிருந்தது?


Q ➤ 374. மோசே தலைவர்களிடம் கானானிலிருந்து எவற்றைக் கொண்டுவரக் கூறினார்?


Q ➤ 375. எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு வருடத்துக்கு முன்னே கட்டப்பட் டிருந்தது எது?


Q ➤ 376. இஸ்ரவேல் தலைவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிலிருந்து எதை அறுத்தார்கள்?


Q ➤ 377. இஸ்ரவேல் புத்திரர் கானானிலிருந்து எவற்றை கொண்டு வந்தார்கள்?


Q ➤ 378. எஸ்கோல் பள்ளத்தாக்கு என்ற பெயர் எதன் நிமித்தம் வந்தது?


Q ➤ 379. தேசத்தைச் சுற்றிப் பார்க்கப் போனவர்கள் எத்தனை நாள் சென்ற பின்பு திரும்பி வந்தார்கள்?


Q ➤ 380. வேவு பார்க்கப் போனவர்கள் கானான் தேசம் எவைகள் ஓடுகிற தேசம் என்று கூறினார்கள்?


Q ➤ 381. வேவு பார்க்கப் போனவர்கள் கானான் தேசத்துக் குடிகளைக் குறித்து கூறியது என்ன?


Q ➤ 382. வேவு பார்க்கப் போனவர்கள் கானான் தேசத்துப் பட்டணங்கள் எப்படி இருக்கிறதாகக் கூறினார்கள்?


Q ➤ 383. கானான் தேசத்தில் யாரைக் கண்டதாக வேவு பார்க்கப் போனவர்கள் கூறினார்கள்?


Q ➤ 384. அமலேக்கியர் எத்தேசத்தில் குடியிருந்தார்கள்?


Q ➤ 385. கானானின் மலை நாட்டில் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 386. கடலருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 387. அந்த தேசத்தை எளிதாய் ஜெயித்து கொள்ளலாம் என்றது யார்?


Q ➤ 388.காலேபோடே போய் வந்த ஜனங்கள் கானானின் குடிகளைக் குறித்து கூறியது என்ன?


Q ➤ 389. கானான் எப்படிப்பட்ட தேசம் என்று காலேபோடே போய் வந்த ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 390. ஏனாக்கின் குமாரர்கள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 391. காலேபோடே போய் வந்த ஜனங்கள் தங்கள் பார்வைக்கு தாங்கள் எப்படியிருந்ததாகக் கூறினார்கள்?


Q ➤ 392. காலேபோடே போய் வந்த ஜனங்கள் தாங்கள் சுற்றிப் பார்த்த தேசத்தைக் குறித்து எதை பரம்பச் செய்தார்கள்?