Tamil Bible Quiz Romans Chapter 13

Q ➤ 770. எந்த மனுஷனும் யாருக்கு கீழ்ப்படியக்கடவன்?


Q ➤ 771. யாராலேயன்றி அதிகாரம் இல்லை?


Q ➤ 772. உண்டாயிருக்கிற அதிகாரங்கள் யாராலே நியமிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 773. அதிகாரத்துக்கு எதிர்த்து நிற்கிறவன் எதற்கு எதிர்த்து நிற்கிறான்?


Q ➤ 774. தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக் கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 775. துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 776. அதிகாரத்துக்கு பயப்படாதிருக்க வேண்டுமானால் எதைச் செய்ய வேண்டும்?


Q ➤ 777. நன்மை செய்வதால் உண்டாவது என்ன?


Q ➤ 778. நமக்கு நன்மை உண்டாகும்பொருட்டு அதிகாரிகள் யாராயிருக்கிறார்கள்?


Q ➤ 779, அதிகாரிகள் எதை விருதாவாய்ப் பிடிக்கவில்லை?


Q ➤ 780. நீதியைச் செலுத்துகிற தேவ ஊழியக்காரன் யார்?


Q ➤ 781. அதிகாரியானவன் தீமை செய்கிறவர்கள் மேல் எதை வரப்பண்ணுகிறான்?


Q ➤ 782. கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல........நிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 783. கீழ்ப்படிவதினிமித்தம் நாம் எதைக் கொடுக்கிறோம்?


Q ➤ 784. யாவருக்கும் செலுத்த வேண்டிய எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 785. ........செலுத்த வேண்டியவனுக்கு வரியையும் வேண்டியவனுக்கு தீர்வையும் செலுத்த வேண்டும்?


Q ➤ 786. எவனுக்கு பயப்பட வேண்டியதோ அவனுக்கு என்னச் செய்ய வேண்டும்?


Q ➤ 787. கனம்பண்ண வேண்டியவர்களுக்கு என்னச் செய்யவேண்டும்?


Q ➤ 788. ஒருவரிடத்திலொருவர் எந்த கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன்படக் கூடாது?


Q ➤ 789. பிறனிடத்தில் அன்பு கூருகிறவன் எதை நிறைவேற்றுகிறான்?


Q ➤ 790. உன்னிடத்தில் நீ அன்புகூருகிறது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியுள்ளது எது?


Q ➤ 791. பிறனுக்கு பொல்லாங்குச் செய்யாதது எது?


Q ➤ 792. அன்பு எதன் நிறைவேறுதலாயிருக்கிறது?


Q ➤ 793. எதை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று?


Q ➤ 794. நாம் எதை அறிந்தவர்களாய் நடக்க வேண்டும்?


Q ➤ 795. விசுவாசிகளானபோது சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் நமக்கு அதிக சமீபமாக இருப்பது எது?


Q ➤ 796. எதன் கிரியைகளைத் தள்ளி விடவேண்டும்?


Q ➤ 797. எதின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம்?


Q ➤ 798. எவைகள் உள்ளவர்களாய் நடக்கக் கூடாது?


Q ➤ 799. எவைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருக்க வேண்டும்?


Q ➤ 800. யாரைத் தரித்துக் கொள்ள வேண்டும்?