Tamil Bible Quiz John Chapter 5

Q ➤ 176. எருசலேமில் ஆட்டு வாசலருகே இருந்தது எது?


Q ➤ 177. பெதஸ்தா எந்த மொழிச் சொல்?


Q ➤ 178. பெதஸ்தா குளத்தில் எத்தனை மண்டபங்கள் இருந்தன?


Q ➤ 179. தண்ணீர் கலங்குவதற்காக பெதஸ்தா குளத்தருகே படுத்திருந்தவர்கள் யார்?


Q ➤ 180. பெதஸ்தா குளத்தை கலக்குபவர் யார்?


Q ➤ 181. தண்ணீர் கலங்கினவுடன் சொஸ்தமடைகிறவன் யார்?


Q ➤ 182. பெதஸ்தா குளத்தினருகே படுத்திருந்தவன் எத்தனை வருட வியாதியஸ்தனாயிருந்தான்?


Q ➤ 183. சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று இயேசு யாரிடம் கேட்டார்?


Q ➤ 184. "எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 185. 38 வருட வியாதியஸ்தன் சொஸ்தமடைந்த நாள் எந்த நாள்?


Q ➤ 186. படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல சுகமடைந்தவனிடம் கூறினவர்கள் யார்?


Q ➤ 187. சொஸ்தமாக்கப்பட்டவன் யாரை அறிந்திருக்கவில்லை?


Q ➤ 188. 38 வருட வியாதியஸ்தன் குணமான பின்பு இயேசு அவனை எங்கே கண்டார்?


Q ➤ 189. "அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 190. 38 வருட வியாதியஸ்தன் தான் குணமானது இயேசுவினால் என்று யாருக்கு அறிவித்தான்?


Q ➤ 191. இயேசுவை கொலைசெய்ய வகை தேடியவர்கள் யார்?


Q ➤ 192. யார், இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார் என்று இயேசு கூறினார்?


Q ➤ 193. நானும் கிரியை செய்து வருகிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 194. யூதர்கள் இயேசுவை கொலை செய்யும்படி வகைதேட காரணம் என்ன?


Q ➤ 195. குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளை அவருக்குக் காண்பிக்கிறவர் யார்?


Q ➤ 196. மரித்தோரை உயிர்ப்பிப்பவர் யார்?


Q ➤ 197. குமாரன் யாரை உயிர்ப்பிக்கிறார்?


Q ➤ 198. நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?


Q ➤ 199. வசனத்தைக் கேட்டு இயேசுவை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு உள்ளது எது?


Q ➤ 200. மரித்தோர் யாருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்?


Q ➤ 201. மரித்தோர் தேவகுமாரனின் சத்தத்தைக் கேட்குங்காலத்தில் யார். ஜீவனை அடையும்படி எழுந்திருப்பார்கள்?


Q ➤ 202. மரித்தோர் தேவகுமாரனின் சத்தத்தைக் கேட்குங்காலத்தில் ஆக்கினையை அடையும்படி எழுந்திருப்பவர்கள் யார்?


Q ➤ 203. சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தவன் யார்?


Q ➤ 204. எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தவன் யார்?


Q ➤ 205. இயேசுவைக் குறித்து சாட்சிகொடுத்திருக்கிறவர் யார்?


Q ➤ 206. எதை ஆராய்ந்து பார்க்கும்படி இயேசு கூறினார்?


Q ➤ 207. இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகள் எவைகள்?


Q ➤ 208. வேத வாக்கியங்களால் நமக்கு கிடைப்பது என்ன?


Q ➤ 209. மனுஷரால் கொடுக்கப்படுகிற மகிமையை ஏற்றுக்கொள்ளாதவர் யார்?


Q ➤ 210. யாருக்கு தேவ அன்பு இல்லையென்று இயேசு கூறினார்?


Q ➤ 211. பிதாவினிடத்தில் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?


Q ➤ 212. இயேசுவைக் குறித்து எழுதியிருக்கிறவர் யார்?