Tamil Bible Quiz John Chapter 18

Q ➤ 800. இயேசு சீஷருடனே கூட எந்த ஆற்றுக்கு அப்புறம் போனார்?


Q ➤ 801. கெதரோன் ஆற்றுக்கு அப்புறம் இருந்தது என்ன?


Q ➤ 802. இயேசு போயிருந்த தோட்டத்தை அறிந்திருந்தவன் யார்?


Q ➤ 803. போர்ச்சேவகர் மற்றும் பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அனுப்பின ஊழியக்காரரோடு இயேசுவிடம் வந்தவன் யார்?


Q ➤ 804. இயேசுவைப் பிடிக்க வந்தவர்கள் எவைகளோடு வந்தனர்?


Q ➤ 805. இயேசு எவற்றையெல்லாம் அறிந்திருந்தார்?


Q ➤ 806. "யாரைத் தேடுகிறீர்கள்"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 807. யாரைத் தேடுகிறோம் என்று இயேசுவைப் பிடிக்க வந்தவர்கள் கூறினார்கள்?


Q ➤ 808. இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யார்?


Q ➤ 809. தன்னை பிடிக்க வந்தவர்களிடம், நான் தான் என்று கூறியவர் யார்?


Q ➤ 810. நான் தான் என்று இயேசு சொன்னவுடனே பின்னிட்டுத் தரையிலே விழுந்தவர்கள் யார்?


Q ➤ 811. என்னைத் தேடுகிறதுண்டானால் இவர்களைப் போகவிடுங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 812. இவர்களைப் போகவிடுங்கள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்?


Q ➤ 813. நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் ....?


Q ➤ 814. தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவியவன் யார்?


Q ➤ 815. பேதுரு யாரை வலதுகாதற வெட்டினான்?


Q ➤ 816. பேதுருவால் காது வெட்டப்பட்ட வேலைக்காரனின் பெயர் என்ன?


Q ➤ 817. "உன் பட்டயத்தை உறையிலே போடு"யார், யாரிடம் கூறியது?


Q ➤ 818. பிதா தமக்குக் கொடுத்த எதில் பானம் பண்ணாதிருப்பேனோ என்று இயேசு கூறினார்?


Q ➤ 819. இயேசுவைப் பிடித்து கட்டினவர்கள் யார்?


Q ➤ 820. இயேசுவைப் பிடித்து முதலாவது யாரிடத்தில் கொண்டு போனார்கள்?


Q ➤ 821. பிரதான ஆசாரியனாயிருந்தவன் யார்?


Q ➤ 822. காய்பாவின் மாமன் யார்?


Q ➤ 823. எது நலமாயிருக்கும் என்று காய்பா யூதருக்கு ஆலோசனை கூறினான்?


Q ➤ 824. இயேசுவுக்குப் பின் சென்ற சீஷர்கள் யார்?


Q ➤ 825. பேதுருவுடன் இயேசுவுக்குப் பின்சென்ற சீஷன் யாருக்கு அறிமுகமானவனாயிருந்தான்?


Q ➤ 826. பேதுருவுடன் சென்ற சீஷன் இயேசுவுடனேகூட பிரதான ஆசாரியனுடைய. .......க்குள் பிரவேசித்தான்?


Q ➤ 827. வாசலருகே வெளியே நின்றவன் யார்?


Q ➤ 828. பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த சீஷன் யாருடனே பேசினான்?


Q ➤ 829. பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த சீஷன் யாரை உள்ளே அழைத்துக்கொண்டு போனான்?


Q ➤ 830. நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்று பேதுருவிடம் சொன்னவள் யார்?


Q ➤ 831. "நான் அல்ல" - கூறியவன் யார்?


Q ➤ 832. இயேசுவை பிடித்துக்கொண்டு போனது எந்த காலமாயிருந்தது?


Q ➤ 833. கரிநெருப்பு உண்டாக்கினவர்கள் யார்?


Q ➤ 834, அரமனையில் குளிர்காய்ந்து கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 835. ஊழியக்காரர் மற்றும் சேவகரோடுகூட குளிர்காய்ந்து கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 836. இயேசுவை விசாரித்தவன் யார்?


Q ➤ 837. பிரதான ஆசாரியன் இயேசுவிடம் எதைக் குறித்து விசாரித்தான்?


Q ➤ 838. இயேசு தாம் எப்படி உலகத்துடனே பேசினதாகக் கூறினார்?


Q ➤ 839. இயேசு எங்கெல்லாம் உபதேசம் பண்ணினார்?


Q ➤ 840. இயேசு எங்கே ஒன்றும் பேசவில்லை என்று கூறினார்?


Q ➤ 841. "நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன"யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 842. இயேசு தாம் சொன்னவைகளை யாரிடத்தில் விசாரிக்கும்படி கூறினார்?


Q ➤ 843. "பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது" - என்று கேட்டவன் யார்?


Q ➤ 844. இயேசுவை ஒரு அறை அறைந்தவன் யார்?


Q ➤ 845, நான் தகாதவிதமாய் பேசினதுண்டானால் ... கூறினார்? என்று இயேசு


Q ➤ 846. என்னை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டவர் யார்?


Q ➤ 847. இயேசுவைக் கட்டுண்டவராக காய்பாவிடம் அனுப்பினவன் யார்?


Q ➤ 848. நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்று இரண்டாம் முறை சொன்னபோது மறுதலித்தவன் யார்?


Q ➤ 849, பேதுரு இயேசுவை மறுதலித்தபோது கூவியது எது?


Q ➤ 850. பேதுரு எத்தனையாவது முறை மறுதலித்தபோது சேவல் கூவியது?


Q ➤ 851. காய்பாவினிடத்திலிருந்து இயேசுவை எங்கே கொண்டு போனார்கள்?


Q ➤ 852. தேசாதிபதியின் அரமனைக்கு இயேசுவை எப்பொழுது கொண்டு போனார்கள்?


Q ➤ 853. தீட்டுப்படாமல் பஸ்காவை புசிப்பதற்காக எங்கே பிரவேசியாதிருந்தார்கள்?


Q ➤ 854. "இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள்" - கேட்டவன் யார்?


Q ➤ 855. ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றவர்கள் யார்?


Q ➤ 856. "நீ யூதருடைய ராஜாவா" - இயேசுவிடம் கேட்டவன் யார்?


Q ➤ 857. "நீராய் இப்படி சொல்லுகிறீரோ”- இயேசு யாரிடம் கேட்டார்?


Q ➤ 858. "நான் யூதனா?" - கேட்டவன் யார்?


Q ➤ 859. இயேசுவை பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 860. எது இவ்வுலகத்திற்குரியதல்ல என்று இயேசு கூறினார்?


Q ➤ 861. எது இவ்வுலகத்திற்குரியதானால் இயேசு யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு தூதர்கள் போராடியிருப்பார்கள்?


Q ➤ 862. "அப்படியானால் நீ ராஜாவோ" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 863. "நீர் சொல்லுகிறபடி நான் ராஜா தான்" - என்றவர் யார்?


Q ➤ 864. இயேசு எதைக்குறித்து சாட்சிகொடுக்கப் பிறந்தேனென்றார்?


Q ➤ 865. இயேசுவின் சத்தம் கேட்கிறவன் யார் என்று இயேசு கூறினார்?


Q ➤ 866. சத்தியமாவது என்ன என்று கேட்டவன் யார்?


Q ➤ 867. இயேசுவினிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 868. எந்த பண்டிகையின்போது ஒருவனை விடுதலைபண்ணுகிறது வழக்கமாயிருந்தது?


Q ➤ 869. யாரை விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்று பிலாத்து ஜனங்களிடம் கேட்டான்?


Q ➤ 871. பரபாஸ் என்பவன் எப்படிப்பட்டவனாய் இருந்தான்?